Tuesday, 5 September 2023

"கஜா" புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்கும். அநேகமாக நாளை மதியம் வாக்கில் பாம்பனுக்கும் நாகைக்கும் இடையே அது 120 வேகத்தில் கரையைக் கடக்கும். அதன் பாதிப்பு 13 மாவட்டங்களில் இருக்கும் என்கிறார்கள்
விஞ்ஞானம் வளர்ந்திருப்பதன் விளைவு இவை
அரசும் ஆலோசனைகளை நடத்துகிறது
கடலூர் மக்கள் எதன்பொருட்டும் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதை நான் கொண்டாடவே செய்கிறேன்
மக்களும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளார்கள்
மூன்று விஷயங்கள்
1) இதுமாதிரி புயல்களை எதிர்கொள்ளும் அளவிலான மீனவக் குடியிருப்புகள்
2) இதுமாதிரி கடலுக்குள். போகமுடியாத காலங்களில் மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு
3) "தானே" கடலூரைத் தாக்கியபோது ஏராளமான மரங்கள் விழுந்தன. அது உண்டாக்கிய சேதம் அளவற்றது.
மரங்களை உரிய முறையில் அவ்வப்போது கவாத்து செய்திருந்தால் அவ்வளவு சேதம் இருந்திருக்காது என்று சொல்லப்பட்டது
"கஜா" வந்து போகட்டும்.
மரங்களை கவாத்து செய்வதை அரசு இயக்கப்படுத்த வேண்டும்
கவாத்து செய்வதால்
1) நீர் செலவு குறையும்
2) மரங்கள் பலப்படும்
3) சேதம் குறையும்

Tuesday, 19 August 2014